Thursday, January 15, 2015

"குற்ற உணர்வு"

கிருஷ்ண பிரபு
பெருமாள்முருகன் செத்துவிட்டான்" என்று படித்தபோது கண்ணைக் கசக்கி அழவெல்லாம் இல்லை. எனினும் ஆகப்பெரிய "குற்ற உணர்வு" ஏற்பட்டது.
இந்த குற்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கக்கூடியதுதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். "நான் தொகுத்த புத்தகங்கள் தவிர்த்து, நான் எழுதிய கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதை மற்றும் பதிப்பித்த புத்தகங்களைத் திரும்பிப் பெற்றுக்கொள்கிறேன்..." என்று பிசாசாக எழுதித் தள்ளிய பெருமாள்முருகன் சொல்லி இருக்கிறார்.
"தீட்டுத் துணி, சித்தன் போக்கு, கு.ப.ரா, தற்போது சி.சு. செல்லப்பா வின் சிறுகதை" என்று பெருமாள்முருகன் தொகுத்த புத்தகங்கள் இருக்கின்றன. இந்த மாதிரி இன்னும் ஒரு ஐம்பது எழுத்தாளர்களை பேராசிரியர் பெ. முருகன் தொகுக்க வாய்ப்பிருக்கிறது. சங்க இலக்கியம் சார்ந்து போதிய ஆழமான பரிட்சயம் முருகனுக்கு இருக்கிறது. அது சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பும் இருக்கிறது.
பெருமாள்முருகன் பேனாவை உடைத்தால் என்ன? பேராசிரியர் முருகன் தட்டச்சு செய்ய மாட்டாரா?
இணையத்தில் உலவும் ரூமார்கள் தாங்க முடியவில்லை. காலையில் கூட முருகன் வீட்டாரிடம் பேசினேன்:
"பாருங்க பிரபு... அவர் இப்போதான் கொஞ்சம் அசந்து தூங்கறாரு... நீங்க பேசினிங்கன்னு சொல்றோம்... அவரே நிதானமா உங்களைக் கூப்பிடுவாரு" என்றார்கள்.
துப்பாக்கிப் பட விஜய் மாரிதி அவர்களிடம் கூறினேன்: "ஐ ஆம் வெயிட்டிங்..."

No comments:

Post a Comment