Wednesday, January 14, 2015

பாடம் நாராயணன்

நேற்று புத்தகக் கண்காட்சியில் பலரும் பார்த்திருப்பீர்கள். இவர் பாடம் நாராயணன்.


 பெருமாள் முருகனுக்கு ஆதவான வாசகத்தை தனக்கு முன்னும் பின்னுமாக அணிந்துகொண்டு தன் மகளுடன் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார். கொஞ்சநாள் வரை பாடம் என்ற பத்திரிக்கையை நடத்திக்கொண்டிருந்தார். முதலில் பார்க்கும்போது பேசுவதற்கான நேரம் கிடைக்கவில்லை. கண்காட்சி முடிந்து வெளிவரும்போது மீண்டும் கண்ணில் பட்டார். அவரிடம் பேசும்போது, சிலநாட்களுக்கு முன்பு பிரான்ஸ்-ல் பத்திரிக்கை அலுவலகத்தில் தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட தாக்குதலில் பிரபல கார்டூனிஸ்ட் ஒருவர் இறந்தார். அதுவும் பெருமாள் முருகன்மீது நடக்கும் தாக்குதலும் ஒன்றுதான். அது மத தீவிரவாதம் என்றால் இது சாதி தீவிரவாதம். அதற்கான வாசகமே நான் குத்தி இருப்பது என்றார். எது எப்படியோ அவ்வளவு பேர் கூடியுள்ள அரங்கில் தனது எதிர்ப்பை பதிவு செய்தமைக்காக எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன்.

வேடியப்பன்

No comments:

Post a Comment