Thursday, January 15, 2015

கோவையில் ஆர்ப்பாட்டம்

படைப்பு சுதந்திரத்தை பறிக்காதே ! பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கோவையில் ஆர்ப்பாட்டம்- கோவை, ஜன. 13-

படைப்பு சுதந்திரத்தை பறிக்காதே, மாதொருபாகன் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும், அவரது படைப்புக்கும் பாதுகாப்பு வழங்கு என்கிற கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுஎகசவின் மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தமுஎகசவின் மாவட்ட செயலாளர் தி.மணி, கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் பாப்பா ரமணி, எழுத்தாளர் ச.பாலமுருகன்,
வெண்மனி, சுந்தரமூர்த்தி, குசேலர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் மதவெறி சக்திகளை தமிழக அரசு கைது செய்யவேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment