Thursday, January 15, 2015

விருத்தாசலம் போராட்டம்!

கரிகாலன் கார்க்கி

போலீஸ் ஸ்டேஷனைக் கண்டால் ஒதுங்கிப் போன கிராமத்துப் பிள்ளைக்கு வீதியில் இறங்கி போராடக் கற்றுக் கொடுத்தது ஈழப் போராட்டம்.அரசியல்,மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு போராட திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.
நேற்று பெருமாள்முருகனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியபோது விருத்தாசலம் காவல்நிலைய ஆய்வாளர் கடுமையாக மிரட்டினார்.மிரட்டலுக்குப் பணியாமல் கண்டனக்குரல் ஒங்கிஒலித்தது.
போராட்டத்தில் எழுத்தாளர் இமையம்,சிபிஎம் அசோகன்,திக இளங்கோவன்,இளந்திரையன்,திமுக இராமு,விசிக ஐயாயிரம்,கவிஞர் இரத்தினபுகழேந்தி,கவிஞர் ஹபீப்ரஹ்மான் என தோழர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.துண்டறிக்கை விநியோகிக்கப் பட்டது.

No comments:

Post a Comment