Thursday, January 15, 2015

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல்

முருகானந்தம் ராமசாமி

கோவில் திருவிழாக்களில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி, மைத்துனி, என உறவுகள் சூழ்ந்திருக்க 'ஆடல்பாடல்' என்கிற பெயரில் ஆபாசநடனத்தை விடியவிடியப்பார்க்கும் நிலையுள்ள சூழலில் ஒரு இலக்கியப்பிரதி தங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக கூப்பாடு போடுவது அபத்தத்தின் உச்சமென்றால் அதற்காகநூலாசிரியரை மனச்சிக்கலில் தள்ளியுள்ளது ஆபத்தின்உச்சம். கொங்குவேளாளர்களின்குலக்கதையாடலாலான 'பொன்னர்-சங்கர்' உடுக்கடிக்கதைப்பாடலை தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் தக்கவைத்துள்ள பெருங்கலைஞர்கள் ஒருவரும் கவுண்டர்களல்ல! மாறாக இச்சமூக அடுக்கின் கீழ்மட்டத்தில் வைக்கப்பட்ட சாதியினர்! அவர்களை ஆதரிக்கவோ,அந்தக்கலைகளை தக்கவைக்கவோ துப்பில்லாத ஆபாசநடனங்களின் அடிமைகள் பண்பாடுகுறித்துப்பேசுவதில் அச்சொல்கூட அருவருப்பை அடையும்! நீங்களெல்லாம்தான் எனது பண்பாட்டின் காவலர்களென்றால் எனது வாழ்வின் பேரவமானம் வேறில்லை! அறிவாண்மை கொண்டபடைப்பாளிகள் மனநோயாளிகளாகவும், அதிகாரவெறிகொண்ட மனநோயாளிகள் பண்பாட்டின் காவலர்களாகவும், ஆவார்களென்றால் அந்த நாற்றமெடுத்த பண்பாட்டில் பங்கேற்க எனக்கு எதுவுமில்லை...!

No comments:

Post a Comment