பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்!
நாள்: 20 ஜனவரி
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை
தோழர்களே!
வருகிற 20 ஜனவரி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பல்வேறு வெகுசன இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சிறு குழுக்கள், தனி நபர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், திரைப்பட ஆவணப்பட இயக்குநர்கள், நாடகக்கலைஞர்கள், நடிகர்கள், ஒவியர்கள், பாடகர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு பின்னணியில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த விருக்கிறோம்.
ஆர்வமுள்ள அக்கறையுள்ள தோழர்கள் திரளாக வந்து கலந்து கொள்ளவும்.
போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான தங்களது யோசனைகளையும் தெரிவிக்கவும்.
எல்லோரும் சேர்ந்தே நடத்த வேண்டிய போராட்டம் இது!
சாதிய, மதவெறி, பாசிச சக்திகளை எதிர்கொள்வோம்!
No comments:
Post a Comment